Tuesday, August 30, 2011

நீண்ட காலமாக அமுல்படுத்தப்பட்டு வந்த அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்ட போதிலும் பயங்கரவாதிகளுக்கு மன்னிப்பு வழங்கப்பட மாட்டாது-திவயின!

Tuesday, August 30, 2011
நீண்ட காலமாக அமுல்படுத்தப்பட்டு வந்த அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்ட போதிலும், பயங்கரவாதிகளுக்கு மன்னிப்பு வழங்கப்பட மாட்டாது என திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

பாரிய பயங்கரவாதச் செயல்களுடன் தொடர்புடைய 250 குற்றவாளிகளுக்கு எவ்வித மன்னிப்பும் வழங்கப்பட மாட்டாது என சிரேஸ்ட அரசாங்கப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த சந்தேக நபர்களுக்கு எதிராக வழக்குத் தொடர்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

விமானங்கள் மற்றும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியமை, குண்டுகளை வைத்தல், படையினரை படுகொலை செய்தல் உள்ளிட்ட பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 250புலிச் சந்தேக நபர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த சந்தேக நபர்களுக்கு அவசரகாலச் சட்ட நீக்கத்தின் ஊடாக எவ்வித சலுகைகளும் அளிக்கப்பட மாட்டாது.

சட்ட மா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனைக்கு அமைய உரிய முறையில் வழக்குத் தொடரப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment