Wednesday, August 31, 2011

பொலிஸார் கைப்பற்றிய பொருட்களை மோசடி செய்தவர் கைது!

Wednesday,August,31,2011
பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட பொருட்களை மோசடி செய்த சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த மற்றுமொரு சந்தேகநபர் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் நேற்று ஆஜர் செய்யப்பட்டார்.

நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தின் முன்னாள் தலைமையக இன்ஸ்பெக்டரே இவ்வாறு நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டுள்ளார், இச்சம்பவம் தொடர்பில் மூன்று பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட 6 இலட்சத்து எண்பதாயிரம் ரூபாய் பெறுமதியுடைய மாணிக்க கற்கள், வைரங்கள், தங்கம் மற்றும் பணம் என்பவற்றை மோசடி செய்ததாக இவர்கள் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

சந்தேகநபர்கள் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டதை அடுத்து எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment