Wednesday, August 31, 2011

நிபுணர்கள் குழு அறிக்கை தொடர்பாக ரொபர்ட் ஓ பிளேக்-புலம்பெயர் தமிழ் அமைப்புகளின் அமைப்புகளின் பிரதிநிதிகள் இடையில் ரகசிய பேச்சுவார்தை–திவயின!

Wednesday,August,31,2011
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான்-கீ-மூனின் நிபுணர்கள் குழுவின் அறிக்கை தொடர்பாக அமெரிக்க உதவி ராஜாங்க செயலாளர் ரொபர்ட் ஓ பிளேக் மற்றும் புலம்பெயர் தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகள் இடையில் ரகசிய பேச்சுவார்தை நடைபெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது என திவயின தெரிவித்துள்ளது.

கடந்த திங்கட்; கிழமை பிளேக் இலங்கைக்கு விஜயம் செய்யவிருந்த போதிலும், அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள ஐரின் புயல் காரணமாக அவர் தனது பயணத்தை ஒத்திவைத்துள்ளார்.

புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் உரையாற்றி பிளேக், ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள் குழுவின் அறிக்கைக்கு அமைய இலங்கை அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்காவிட்டால், தான் அதனை ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவை அல்லது, அதன் ஆணையாளர் நவநீதம் பிள்ளையிடம் கையளிக்க போவததாக உறுதி வழங்கியுள்ளார்.

பிளேக்கிடம் கருத்து வெளியிட்ட புலம்பெயர் தமிழர் அமைப்புகளில் பிரதிநிதிகள் இலங்கையின் வடக்கில், இராணுவ முகாம்கள் அமைக்கப்படுவதாகவும், சிங்கள மக்கள் தமிழ் மக்களின் காணிகளில் குடியேற்றப்படுவதாகவும் முறையிட்டுள்ளனர். இதற்கு பதிலளித்துள்ள பிளேக் இது குறித்து ஆராய்ந்து பார்ப்பதாக உறுதியளித்துள்ளார்.

No comments:

Post a Comment