Saturday, July 16, 2011

யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் அரசாங்கத் தரப்பினராக இருந்தாலும் புலி உறுப்பினராக இருந்தாலும் தராதரம் பாராது தண்டனை விதிக்கப்பட வேண்டும்-அமெரிக்கா காங்கிரஸ்!

Saturday, July 16, 2011
இலங்கை யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டுமென அமெரிக்கா காங்கிரஸ் சபை உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செனல்4 ஆவணப்படம் தொடர்பான காட்சிகள் நேற்று அமெரிக்காவில் ஒளிபரப்புச் செய்யப்பட்டது.

அமெரிக்க காங்கிரஸ் சபை உறுப்பினர் ஜேம்ஸ் மெக்கோவன் கோரிக்கை விடுத்துள்ளார்.

மனித உரிமை மீறல்களுக்கான சிறந்த உதாரணமாக இந்த காட்சிகள் அமைந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக சுயாதீனமான விசாரணைகள் நடத்தப்பட்டு தண்டனை விதிக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

குற்றச் சாட்டுக்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்கத் தவறினால், சர்வதேச சமூகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் அரசாங்கத் தரப்பினராக இருந்தாலும் புலி உறுப்பினராக இருந்தாலும் தராதரம் பாராது தண்டனை விதிக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

செனல்4 ஆவணப்படத்தை அமெரிக்காவில் ஒளிபரப்புச் செய்வதற்கு சர்வதேச மன்னிப்புச் சபை உள்ளிட்ட சில தொண்டு நிறுவனங்கள் ஒழுங்குகளை மேற்கொண்டிருந்தன

No comments:

Post a Comment