Saturday, July 16, 2011

(புலி)கூட்டமைப்பு உறுப்பினர் சிறிதரன் சுமத்தியுள்ள குற்றச்சாட்டு தவறானது ஆதாரமற்றது:படையினர் கோபமாக உள்ளனர் விளைவுகள் மோசமடையலாம் மகிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார்!

Saturday, July 16, 2011
கிளிநொச்சியில் இராணுவத்தினர் வீடு வீடாகச் சென்று வெற்றிலைச் சின்னத்துக்கு வாக்களிக்குமாறு வற்புறுத்துகின்றனர் என (புலி)கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் சுமத்தியுள்ள குற்றச்சாட்டு தவறானது எனவும் ஆதாரமற்றது எனவும் யாழ். படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி, பச்சிலைப்பள்ளி, மாசார் பிரதேசங்களில் படையினர் வெற்றிலைச் சின்னத்துகு வாக்களிக்குமாறு பொது மக்களை வற்புறுத்துகின்றனர் என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில் ஹத்துருசிங்க இதனை குறிப்பிட்டுள்ளர்.

வடக்குத் தளபதி என்ற முறையில் அந்தக் குற்றச்சாட்டை மறுக்கின்றேன், படையினர் எவரும் இத்தகைய செயல்களில் ஈடுபடவில்லை. படையினர் மக்களுக்குத் தேவையான சேவையை வழங்கி வருகின்றனர்.

மக்களுக்கு படையினர் செய்யும் சேவையைப் பொறுக்க முடியாத சிலரே அவர்களைக் களங்கப்படுத்தி குற்றச்சாட்டுக்களைச் சுமத்துகிறனர். சிறிதரனின் கருத்தால் படையினர் கோபமாக உள்ளனர் எனவும் விளைவுகள் மோசமடையலாம் எனவும் ஹத்துருசிங்க தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment