Friday, June 21, 2019

சட்டசபை தேர்தலில் ரஜினிகாந்த் நிச்சயம் போட்டியிடுவார்: சத்யநாராயண ராவ்!

வருகிற சட்டசபை தேர்தலில் ரஜினிகாந்த் நிச்சயம் போட்டியிடுவார் என்று அவரது அண்ணன் சத்யநாராயண ராவ் தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் பூவராக சாமி கோவிலில், நடிகர் ரஜினிகாந்தின் அண்ணன் சத்யநாராயண ராவ் சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-வருகிற சட்டசபை தேர்தலில் ரஜினிகாந்த் நிச்சயம் போட்டியிடுவார். உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட மாட்டார். பிரதமர் மோடியின் செயல்பாடு சிறப்பாக உள்ளது. இன்னும் 2 ஆண்டுகளில் தமிழகத்திற்கு நல்லது நடக்க உள்ளது.தமிழகத்தில் தற்போது நிலவும் குடிநீர் பிரச்சனைக்கு இயற்கையே காரணம்.
யாரையும் குறை சொல்வதில் எந்த பலனும் இல்லை.நடிகர் சங்க தேர்தல் தள்ளி போனது ஏன் என்று எனக்கு தெரிவில்லைஇவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment