Monday, May 20, 2019

NTJ உறுப்பினர் என்ற சந்தேகத்தில் பாராளுமன்ற ஊழியர் உட்பட ஐவர் கைது!

தடைசெய்யப்பட்ட தேசிய தெளஹீத் ஜமாத் உறுப்பினர் என்ற சந்தேகத்தில் பாராளுமன்ற ஊழியர் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.நேற்று குருணாகல் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விஷேட சுற்றிவளைப்போதே  அவர்களைக் கைதுசெய்ததாக பொலிசார் கூறினர்.
 
இந் நிலையில் கைது செய்யப்பட்ட ஐவரையும் தற்போது பொலிசார் தடுத்து வைத்து விசாரித்து வருகின்றனர்.இதனிடையே மேல் மாகாண உளவுத்துறையின் தகவல்களுக்கு அமைய ஹொரவ்பொத்தானை பொலிசாரால் கைது செய்யப்பட்டு 72

 மணிநேர தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்கப்பட்டு வந்தஇ 21/4 தொடர் குன்டுத் தாக்குதல்தாரிகளுடன் நேரடித் தொடர்பினை கொன்டிருந்ததாக கூறப்படும் இரு பாடசாலை அதிபர்களையும் இம்மாதம் 28 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க  நீதிமன்றம் உத்தரவிட்டது.

No comments:

Post a Comment