Sunday, May 19, 2019

பயங்கரவாதத்தை ஒழிக்க இலங்கைக்கு உதவி செய்வோம்'': இலங்கைக்கான இந்திய துாதர் தரஞ்சித் சிங்!

பயங்கரவாதத்தை ஒழிக்க இலங்கைக்கு உதவி செய்வோம்'' என இலங்கைக்கான இந்திய துாதர் தரஞ்சித் சிங் கூறினார்.
 
இலங்கையில் கடந்த மாதம் தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் தற்கொலை தாக்குதல்நடத்தினர். இதில் 260 பேர் உயிரிழந்தனர்; 500க்கும் மேற்பட்டோர் காயம்அடைந்தனர்.
 
இந்த தாக்குதல் சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக நுாற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்நிலையில் கண்டி நகரில் இந்திய தூதர் தரஞ்சித் சிங் செய்தியாளர்களிடம்

பேசிய போது ''இலங்கையை அச்சுறுத்தும் பயங்கரவாதிகளை ஒழிக்க இந்தியா எல்லா உதவிகளையும் செய்யும்'' என்றார்

No comments:

Post a Comment