Monday, May 20, 2019

நம்பிக்கையில்லா பிரேரணைக்கு நாட்டிற்கு அன்பு செலுத்தும் அனைவரதும் ஒத்துழைப்பு கிடைக்கும்: செஹான் சேமசிங்க!

முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு அடிப்படைவாதம், இனவாதத்தை மீறி நாட்டிற்கு அன்பு செலுத்தும் அனைவரதும் ஒத்துழைப்பு கிடைக்கும் என நம்புவதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று குறித்த நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க எந்த கட்சி என்று கருத்திற்கொள்ள தேவையில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். எனவே இந்த நம்பிக்கையில்லா பிரேரணைக்கு வாக்குகளிப்பவர்களின் அடிப்படையில் யார் நாட்டை

 நேசிப்பவர்கள், யார் தீவிரவாத்தை ஆதரவளிப்பவர்கள் என மக்களுக்கு அறிந்து கொள்ள முடியும்
 எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment