Friday, January 18, 2019

லக்ஷமன் கதிர்காமரின் படுகொலையுடன் தொடர்புடைய புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர் ஒருவர் ஜெர்மனியில் கைது

முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷமன் கதிர்காமரின் படுகொலையுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும்  புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர் ஒருவர் ஜெர்மனியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

39 வயதான நவநீதன் எனும் குறித்த நபர் தென் ஜேர்மனில் வைத்து அவருடைய வீட்டிலேயே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

2005 ஆம் ஆண்டு முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் படுகொலை செய்யப்பட்டார்.

மேலும் கைது செய்யப்பட்ட நபர் ஈ.பி.டி.பி கட்சியின் டக்ளஸ் தேவானந்தாவை கொலை செய்வதற்கு திட்டமிட்டிருந்ததாகவும் ஜேர்மனிய பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

2 comments: