Friday, January 18, 2019

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ கடமைகளைப் பொறுப்பேற்றார்

எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஸ இன்று காலை மாகஸ் பிரனாந்து மாவத்தையில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத்தில் தமது கடமைகளை ஆரம்பித்தார்.

இதற்கு முன்னர், நாடாளுமன்றில் அமைந்துள்ள எதிர்கட்சித் தலைவர் காரியாலயத்தில் தனது கடமைகளை அவர் ஆரம்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
இதேவேளை, தற்போதைய அசாங்கம் வலுகட்டாயமாக பதவியில் இருப்பதற்கு ஆதரவளிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு, நாட்டை பிரிப்பதற்கு இடமளிக்க போவதில்லை என எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லை பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
 
கொழும்பு 07 இல் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று காலை 09.00 மணியளவில் அவர் கடமைகளைப் பொறுப்பெற்றுள்ளார்.

அண்மையில் சபாநாயகர் கருஜயசூரிய மஹிந்த ராஜபக்ஷவை எதிர்க்கட்சித் தலைவராக ஏற்றுக் கொள்வதாக அ
றிவித்திருந்ததையடுத்து அவர் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.
 

No comments:

Post a Comment