Thursday, January 26, 2017

குடியரசுதின விழாவை முன்னிட்டு டில்லியில் உள்ள அமர்ஜவான் ஜோதியில் பிரதமர் மோடி மரியாதை!

புதுடில்லி: குடியரசுதின விழாவை முன்னிட்டு டில்லியில் உள்ள அமர்ஜவான் ஜோதியில் பிரதமர் மோடி மரியாதை மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து 2 நிமிட மவுன அஞ்சலி செலுத்தினார். ராணுவ வீரர்களின் பாரம்பரிய இசை முழங்கப்பட்டது. ராஜ்பாத்தில் நடக்கும் குடியரசுதின விழாவையொட்டி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
 
 நாட்டின் 68 வது குடியரசு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு பிரதமர் மோடி, நாட்டு மக்கள் அனைவருக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டுள்ளார்.
டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்" என குறிப்பிட்டுள்ளார். குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த தலைவர்களும் நாட்டு மக்களுக்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment