Wednesday, January 18, 2017

சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள விமல் வீரவன்ச நூல் ஒன்றை எழுதி வருகின்றார்!

சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச நூல் ஒன்றை எழுதி வருகின்றார். மஹிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் வாகன துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டதாக விமல் வீரவன்ச மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
 
அண்மையில் கைது செய்யப்பட்ட விமல் வீரவன்ச தற்போது விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார். நாள்தோறும் நள்ளிரவு 12.00 மணி வரையில் கண் விழித்து நூல் எழுதும் பணிகளில் விமல் வீரவன்ச ஈடுபட்டு வருகின்றார்.
 
கிடைத்துள்ள ஓய்வில் தாம் நூல் எழுதி வருவதாகவும் இதுவரையில் 24 பக்கங்கள் எழுதி முடித்துள்ளதாகவும் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். சிறையிலிருந்து விடுதலையானதும் தாம் இந்த நூலை அச்சிட்டு வெளியிட தீர்மானித்துள்ளதாக வீரவன்ச கூறியுள்ளார்.

No comments:

Post a Comment