Wednesday, January 18, 2017

ஏ-9 நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஓமந்தை சோதனைச் சாவடி அகற்றப்படாது: இராணுவப் பேச்சாளர்!

ஏ-9 நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஓமந்தை சோதனைச் சாவடி முற்றாக அகற்றப்படாது என்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனிவிரத்ன தெரிவித்துள்ளார்.
 
ஏ-9 நெடுஞ்சாலைக்கு மேற்குப் பகுதியில் உள்ள காணிகளை மாத்திரமே இராணுவத்தினர் கையளிப்பர். நெடுஞ்சாலையின் மறுபக்கத்தில் இராணுவத்தினர் தொடர்ந்து நிலைகொண்டிருப்பர். காணிகளை விடுவிக்கும் இந்த முடிவு சடுதியாக எடுக்கப்பட்ட ஒன்றல்ல.
 
தனியார் காணிகளை விட்டு வெளியேறும் நடவடிக்கைகள் ஏற்கனவே இடம்பெற்று வருகின்ற ஒன்று தான் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment