Monday, August 15, 2016

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மேலும் பல வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ளவுள்ளார்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மேலும் பல வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ளவுள்ளார். வெளிநாட்டில் வாழும் இலங்கையர்களின் அழைப்பின் பேரில் அவர் இந்தப் பயணங்களை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
இத்தாலி, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் வாழும் இலங்கையர்களின் அமைப்புக்கள் விடுத்துள்ள கோரிக்கைகளை மஹிந்த ராஜபக்ச ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
 
இந்த விஜயத்துக்கான, மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அனைத்து செலவுகளையும் அந்தந்த நாட்டில் வாழும் இலங்கையர்கள் பொறுப்பேற்றுள்ளனர். நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரங்கள் மற்றும், எதிர்கால நடவடிக்கைகள் குறித்து இந்த விஜயத்தின் போது கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment