Monday, August 15, 2016

காணாமற்போனோர் பணியகம் மூலம் முன்னாள் புலிகளை கைது செய்ய முடியும் - ஹெல உறுமய!

காணாமல்போனோர் அலுவலகம் குறித்த சட்டத்தை ஜாதிக ஹெல உறுமய வரவேற்றுள்ளது. இதுகுறித்துக் கருத்து வெளியிட்டுள்ள திக ஹெல உறுமய கட்சியின் பேச்சாளர் நிசாந்த ஸ்ரீ வர்ணசிங்க, காணாமல்போன ஆயிரக் கணக்கான படைவீரர்கள் மற்றும் காவல்துறையினர் பற்றிய தகவல்களும் கண்டறியப்பட வேண்டும்.
 
புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட  புலிகளின் முன்னாள் போராளிகளைக் கூட மீளவும் கைது செய்து, காணாமல் போன படையினர் பற்றிய தகவல்களை திரட்ட முடியும். தமிழ் அரசியல்வாதிகள் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்டவற்றை மறந்து நல்லிணக்கப் பாதையில் நகர மறுத்தல்,  புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட குற்றச் செயல்கள் பற்றியும் விசாரணை செய்யப்பட வேண்டும்.
 
காணாமல் போனோர் பற்றிய அலுவலகமானது நாட்டு மக்களுக்கு பொறுப்பு சொல்ல வேண்டுமே தவிர, ஜெனீவாவிற்கு பொறுப்பு சொல்லும் வகையில் அமையக் கூடாது என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment