Friday, November 27, 2015

கடந்த அரசாங்கம் பதவியில் இருந்தபோது வடக்கில் புலி தீவிரவாதிகளின் மாவீரர் தின சுவரொட்டிகளை ஒட்ட தாம் இடமளிக்கவில்லை: கோத்தபாய ராஜபக்ச!

கடந்த அரசாங்கம் பதவியில் இருந்தபோது வடக்கில் புலி தீவிரவாதிகளின் மாவீரர் தின சுவரொட்டிகளை ஒட்ட தாம் இடமளிக்கவில்லை என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
 
ரக்னா லங்கா பாதுகாப்பு நிறுவனத்தில் இடம்பெற்ற ஊழல், மோசடிகள் குறித்த விசாரணைகளுக்காக கோத்தபாய ராஜபக்ச, இன்று ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகிவிட்டு, வெளியேறும் போது ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
 
புலி தீவிரவாதிகளின் மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதற்காக வடக்கில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருப்பது குறித்து நீங்கள் என்ன கூறுகிறீர்கள் என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த கோத்தபாய, எனது காலத்தில் சுவரொட்டிகள் ஒட்டப்படவில்லை. நான் தற்போது பாதுகாப்புச் செயலாளர் அல்ல. எனது காலத்தில், அவற்றை ஒட்ட இடமளிக்கவில்லை. இதனால்தான் ஆணைக்குழுக்களுக்கு வந்து செல்கிறோம் என்றார்.

No comments:

Post a Comment