Saturday, October 3, 2015

ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்டுள்ள அமெரிக்க பிரேரணைஜனநாயகத்தையே வலியுறுத்துகிறது: ரணில்!

Saturday, October 03, 2015
ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்டுள்ள அமெரிக்க பிரேரணை பிரதானமாக இலங்கையில் ஜனநாயகத்தை ஏற்படுத்துவது தொடர்பிலேயே வலியுறுத்தியுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போது இதனைத் அவர் தெரிவித்துள்ளார்.

மகிந்த ராஜபக்ஷவின் அரசாங்கமே இலங்கை விடயத்தை ஜெனீவாவின் நிகழ்ச்சி நிரலில் சேர்ப்பித்தது.

ஐக்கிய நாடுகளின் பொது செயலாளர் பான் கீ மூனுடன் இணைந்து கூட்டறிக்கையை விடுத்த மகிந்தராஜபக்ஷவே சர்வதேச சட்டத்திட்டங்களின் படி செயற்படுவதாக உறுதியளித்தார்.

ஆனால் தற்போது சம்பூரணமாக உள்ளக விசாரணை ஒன்றை கொண்டு வந்திருக்கின்ற நிலையில் அதற்கும் அவர்களே எதிர்ப்பை தெரிவிக்கின்றனர் என்று பிரதமர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment