Saturday, October 3, 2015

முழுமையான அரசியல் யாப்புக்கு அமையவே உள்ளக பொறிமுறை: மைத்திரிபால!

Saturday, October 03, 2015
முழுமையான உள்ளக பொறிமுறையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்படும். 
இது இலங்கையின் அரசியல் யாப்பு ஏற்புடையதாகவே முன்னெடுக்கப்படும்" என்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நியுயோர்க்கில் ஐக்கிய நாடுகளின் பொது சபை அமர்வில் கலந்து கொண்டுவிட்டு, நாடு திரும்பிய அவர் நேற்று இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

" அமெரிக்காவின் பிரேரணையில் கலப்பு நீதிமன்றம் என்ற விடயத்தை நீக்கியுள்ளோம்.

இந்த நிலையில், மறுசீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு கரிசனைக்குரிய விடயங்கள் தொடர்பில், அனைத்து கட்சிகள், சர்வமதத் தலைவர்கள், புத்திஜீவிகள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள புலம்பெயர்ந்த மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விடயங்களில் தாம் தனித்து தீர்மானங்களை மேற்கொள்ளப் போவதில்லை என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

" மஹிந்த ராஜ­ப­க்ஷவின் ஆட்­சிக்­கா­லத்தில் பொரு­ளா­தார தடை விதிக்­கப்­படும் ஆபத்தும் காணப்­பட்­டது. அதற்கு முன் ஏற்­பா­டாக ஜீ.எஸ்.பி. வரிச்­ச­லுகை நீக்கம், ஐரோப்­பியன் ஒன்­றி­யத்தின் மீன் இறக்­கு­மதி தடை போன்­றன விதிக்­கப்­பட்­டன. பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மையில் ஆட்­சி­ய­மைத்து இந்த நிலை­மையை மாற்­று­வ­தற்­கான பய­ணத்தை ஆரம்­பித்தோம்.

அதன் முதற்­ப­டி­யாக 19 ஆவது திருத்­தத்தை நிறை­வேற்றி எனக்­குள்ள நிறை­வேற்று அதி­கா­ரங்கள் சில­வற்றை குறைத்தேன். சுயாதீன ஆணைக்­கு­ழுக்­களை நிறு­வு­வ­தற்கு நட­வ­டிக்கை எடுத்தேன். நாட்டில் ஜன­நா­ய­கத்­தையும் மனித உரி­மை­க­ளை­யும் பாதுகாத்தோம்.

காணாமல் போதல், கொலைகள், மோதல்கள், தாக்­கு­தல்கள் இல்­லாத ஜனா­நா­யத்­து­ட­னான நல்­லாட்­சியை உரு­வாக்­கினோம். ஜன­வரி 8 ஆம் திகதி இந்த புரட்­சி­யினை உரு­வாக்­கினோம். அதன்­பின்னர் ஆகஸ்ட் 17 ஆம் திக­தியின் பின்னர் தேசிய அர­சாங்கம் ஒன்றை ஏற்­ப­டுத்தி அர­சியல் இணக்­கப்­பாட்டை நிறு­வினோம்.

இதன்­மூலம் சர்­வ­தேச ஆத­ரவு கிடைத்­தது. எமது நட­வ­டிக்­கையை சர்­வ­தேசம் வர­வேற்­றது" எனவும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment