Sunday, September 27, 2015

வெளிநாட்டு நிபுணர்களை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் அரசாங்கம் கொண்டுவரவில்லை: ஜீ.எல்.பீரிஸ்!

Sunday, September 27, 2015
வெளிநாட்டு நிபுணர்களை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் அரசாங்கம் கொண்டுவரவில்லை என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் சம்பிக்க ரணவக்க சுமத்தியுள்ள குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கம் எந்த சந்தர்ப்பத்திலும் வெளிநாட்டு நீதவான்கள், வெளிநாட்டு நிபுணர்கள் மற்றும் விசாரணையாளர்களை அழைத்து வந்ததில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாட்டு நிபுணர்களின் ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்பட்ட போதிலும், நிபந்தனைகளின் அடிப்படையில் அவை பெற்றுக்கொள்ளப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

பரணகம ஆணைக்குழுவிற்கு ஆலோசனை வழங்க, வெளிநாட்டு நிபுணர்களின் தொழில்சார் ஆலோசனைகள் பெற்றுக்கொள்ளப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த ஆலோசனைகளை ஏற்றுக்கொள்வதும் நிராகரிப்பதும் அரசாங்கத்தின் தீர்மானகவே காணப்பட்டது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த காலங்களில் வெளிநாட்டு நிபுணர்களின் உதவி வளவாளர்கள் என்ற அடிப்படையிலேயே பெற்றுக்கொள்ளப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், தற்போதைய நிலைமைமுற்றிலும் மாறுபட்டது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். உள்நாட்டு நீதிமன்ற விவகாரங்களில் வெளிநாட்டு நீதவான்களின் பங்களிப்பு தலையீடு என்பது ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment