ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் இலங்கையில் இயங்குவதாக வெளியான தகவல்களுக்கு எவ்வித
சாட்சியங்களும் இல்லை என்று பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி, இலங்கையர்
ஒருவர் ஐஎஸஐஎஸ் தீவிரவாதிகளுடன் இணைந்திருந்தார் என்று கூறப்பட்டபோதும்,
அந்த அமைப்பு இலங்கையில் இயங்குவது தொடர்பில் எவ்வித சாட்சியங்களும் இல்லை
என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் தாக்குதல்களை தாம் கண்டிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
கண்டியில் இன்று பௌத்த பீடாதிபதிகளை சந்தித்த பின்னரே அவர் இந்தக்கருத்துக்களை வெளிப்படுத்தினார்.
திருடன் வீட்டுக்குள் புகுந்து திருடும்வரை பார்த்துக் கொண்டு
இருந்துவிட்டு பின்னர் நடவடிக்கை எடுப்பது சாத்தியமாகாது. எனவே படையினர்
எந்தநேரமும்; விழிப்பாகவே செயற்பட்டு வருவதாக ஹெட்டியாராச்சி
குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment