Friday, September 11, 2015

சீபா உடன்­ப­டிக்­கையை கைச்­சாத்­திட்டு இலங்­கையை இந்­திய கால­னித்­துவ நாடாக மாற்­றவே ரணில் முயற்­சி : விமல் வீர­வன்ச!

Friday, September 11, 2015
சீபா உடன்­ப­டிக்­கையை கைச்­சாத்­திட்டு இலங்­கையை இந்­திய கால­னித்­துவ நாடாக மாற்­றவே ரணில் முயற்­சிக்­கின்றார். கடந்த தேர்­தலில் இந்­தியா செய்த உத­விக்கு ரணில் இப்­போது மாற்­று­தவி செய்­கின்றார் என விமல் வீர­வன்ச தெரி­வித்தார். தேசிய சுதந்­திர முன்­ன­ணி­யினால் நேற்று நடத்­தப்­பட்ட செய்­தி­யாளர் சந்­திப்பின் போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.
 
உலகில் எங்கும் இல்­லா­த­வா­றான ஒரு அர­சாங்கம் இலங்­கையில் இன்று நடை­மு­றையில் உள்­ளது. கடந்த ஆட்­சியில் இருந்த அமைச்­ச­ரவை மிகவும் மோச­மா­னது எனவும் தான்­தோன்­றித்­த­ன­மாக அமைச்சுப் பத­விகள் வழங்கப்படு­கின்­றது எனவும் குறிப்­பிட்­ட­வர்கள் இன்று நல்­லாட்­சி­யிலும் அதே முறை­மை­யையே கையாள்­கின்­றனர். தமது அதி­கா­ரங்­களை தக்­க­வைக்கும் நோக்­கத்தில் அமைச்சுப் பத­வி­களை அதி­க­ரித்து செல்­கின்­றனர். அதேபோல் கடந்த ஆட்­சியில் மக்­களால் தோற்­க­டிக்­கப்­பட்ட அனை­வரும் இந்த ஆட்­சியில் மீண்டும் தலை­தூக்­கி­யுள்­ளனர். ஆகவே மஹிந்­தவை விரட்­டி­ய­டிக்கும் ஒரே நோக்­கத்தில் மட்­டுமே இவர்கள் அனை­வரும் செயற்­பட்­டுள்­ளனர் என்­பது வெளிப்­பட்­டுள்­ளது.
 
அதேபோல் ஐக்­கிய தேசியக் கட்­சிக்கு வாக்­க­ளித்த மக்­களும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணிக்கு வாக்­க­ளித்த மக்­களும் விரும்­பிய அர­சாங்கம் அல்ல இப்­போது அமைந்­துள்­ளது. இரண்டு தரப்பு மக்­க­ளையும் ஏமாற்றும் வகையில் ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் செயற்­பட்­டுள்­ளனர். ஆகவே அதற்­கான விளை­வு­களை மக்கள் இன்று அனு­ப­வித்து வரு­கின்­றனர். ஆகவே உண்­மை­யான ஆட்­சியை விரும்பும் மக்கள் எம்­பக்கம் இணை­ய­வேண்­டிய அவ­சியம் இப்­போது ஏற்­பட்­டுள்­ளது.
 
அதேபோல் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க அடுத்­த­வாரம் இந்­தி­யா­வுக்­கான விஜ­யத்­தினை மேற்­கொள்­ள­வுள்ளார். இந்த விஜ­யத்தின் போது முக்­கி­ய­மான சில உடன்­ப­டிக்­கைகள் கைச்­சாத்­திடப் போவ­தாக தக­வல்கள் வெளி­வந்­துள்­ளன. குறிப்­பாக தலை­மன்னார் மிஇரா­மேஸ்­வரம் தரை­வழி இணைப்பு தொடர்­பிலும், இந்­திய மீன­வர்­களை மீன்­பி­டிக்க அனு­ம­திக்கும் உடன்­ப­டிக்­கையும் அத்­தோடு சீபா உடன்­ப­டிக்­கை­யையும் கைச்­சாத்­திடப் போவ­தாக தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.
 
குறிப்­பாக சீபா உடன்­ப­டிக்கை கைச்­சாத்­தி­டப்­பட்டால் நாட்டின் நிலைமை தலை­கீ­ழாக மாறி­விடும். எமது ஆட்­சியில் இந்த உடன்­ப­டிக்­கையை கைச்­சாத்­திட இந்­தியா அழுத்தம் கொடுத்­தது. எனினும் எமது நாட்டின் நிலை­மை­களை கவ­னத்தில் கொண்டு நாம் அந்த உடன்­ப­டிக்­கையை தவிர்த்­துக்­கொண்டோம். ஆனால் இப்­போது மீண்டும் சீபா உடன்­ப­டிக்­கையை கைச்­சாத்­திட தயா­ரா­கி­யுள்­ளனர் என்று குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment