Friday, September 11, 2015

சுதந்­திரக் கட்­சியை பலவீனமாக்கும் சந்திரிகா : முன்னாள் ஜனா­தி­ப­தி­ மஹிந்த ராஜபக்ஷ!

Friday, September 11, 2015
2005 முதல் 2015ஆம் ஆண்­டு­களில் தாம் பொலிஸ் ஆட்­சியை நடத்­தி­ய­தாக முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா குமா­ர­துங்க வெளி­யிட்­டுள்ள கருத்தை பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் முன்னாள் ஜனா­தி­ப­தி­யு­மான மஹிந்த ராஜபக்ஷ மறுத்­துள்ளார்.

அண்­மையில் ஹிந்­து­வுக்கு வழங்­கிய செவ்­வியில் சந்­தி­ரிகா இந்தக் குற்­றச்­சாட்டை சுமத்­தி­யி­ருந்தார்.
 
இதற்கு ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் வாக்­கா­ளர்­களின் கவ­னத்­துக்கு என்ற தலைப்­பிட்டு வெளி­யி­டப்­பட்ட அறிக்கை ஒன்றின் மூலம் பதி­ல­ளித்­துள்ள மஹிந்த ராஜபக்ஷ,சந்திரிகா தம்மை குறை கூறி­யுள்ள அதே­நேரம் தமது சொந்தக் கட்­சி­யான ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்சி உறுப்­பி­னர்­க­ளையும் பரி­காசம் செய்­துள்­ள­தாக குறிப்­பிட்­டுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் போஷ­க­ராக உள்ள சந்­தி­ரிகா தமது கட்­சியில் உள்­ள­வர்­க­ளையே கொலை­கா­ரர்கள் என்று ஹிந்து செவ்­வியில் குறிப்­பிட்­டுள்ளார்.
இது கட்­சிக்கு சர்­வ­தேச ரீதியில் பாதிப்பை ஏற்­ப­டுத்தும் என்­ப­துடன் ஐக்­கிய தேசியக் கட்­சியின் முன்னாள் ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் உறுப்­பி­னர்­க­ளுக்கு செல்­வாக்கை குறையச் செய்­துள்­ள­தா­கவும் மஹிந்த தெரி­வித்­துள்ளார்.

சந்­தி­ரி­கா­வுக்கு ஏற்­க­னவே காணி முறை­கேடு தொடர்பில் நீதி­மன்ற வழக்கு ஒன்று தாக்கல் செய்­யப்­பட்­ட­மை­யையும் மஹிந்த தமது அறிக்­கையில் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.
 
கடந்த ஜனா­தி­பதி தேர்­த­லின்­போது மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் வெற்­றிக்கு இந்­தி­யாவின் பின்­புலம் இல்லை என்று ஹிந்து செவ்­வியில் குறிப்­பிட்­டி­ருந்த சந்­தி­ரிகா அதன்­போது வைபர் தொழில்­நுட்பம் மூலமே தக­வல்­களை பரி­மா­றிக்­கொண்­ட­தாக குறிப்­பிட்­டி­ருந்தார். இது தொடர்பில் கருத்­து­ரைத்­துள்ள மஹிந்த ராஜ­பக் ஷ, தமது ஆட்­சி­யின்­போது தொலை­பே­சி­களை ஒட்­டுக்­கேட்கும் நட­வ­டிக்­கைகள் இடம்­பெ­ற­வில்லை என்று குறிப்­பிட்­டுள்ளார்.

எனவே தமது கட்­சிக்­கா­ரர்­க­ளையே தூஷிக்கும் ஒருவர் குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வாக்காளர்கள் மனதில் கொள்ளவேண்டும். இது கட்சியை மேலும் பலவீனமாக்கும் என்பதையும் அவர்கள் உணரவேண்டும் என்று மஹிந்த தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment