Wednesday, September 23, 2015

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், நாடாளுமன்றத்துக்கு வெளியில் ஆர்ப்பாட்டம்!

Wednesday, September 23, 2015
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், நாடாளுமன்றத்துக்கு வெளியில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.

நிதி ஒழுங்குகள் சட்ட மூலம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட முறைமைக்கும், இது குறித்த விவாதத்தின் போது பிரதமர் ரணில் விக்ரமசிங்க வெளியிட்ட கருத்துக்களுக்கும் எதிர்ப்பு தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

நிதி ஒழுங்குகள் சட்ட மூலம் குறித்த விவாதத்தின் போதும், சிறிலங்கா சுதந்திர கட்சியின் எதிர்கட்சித் தரப்பைச் சேர்ந்த உறுப்பினர்கள் சிலரும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் உறுப்பினர்கள் சிலரும் நாடாளுமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

இதனை அடுத்தே இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

எவ்வாறாயினும் நிதி ஒழுங்கு சட்ட மூலம் குறித்த விவாதங்கள் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் இடம்பெறுகிறது.

No comments:

Post a Comment