Saturday, September 26, 2015

ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகைத் திட்டம் தொடர்பில் இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையில் பேச்சுவார்த்தை!

Saturday, September 26, 2015
ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகைத் திட்டம் தொடர்பில் இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

பதில் வெளிவிவகார அமைச்சர் டொக்டர் ஹர்ஸ டி சில்வாவிற்கும், ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைத் தூதுவர் டேவிட் டாலிக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின் போது, ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகைத் திட்டத்தை மீள அளிப்பது குறித்து பேசப்பட்டுள்ளது.

மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டமை உள்ளிட்ட சில காரணங்களினால் கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் இலங்கைக்கு வழங்கப்பட்டு வந்த, ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகைத் திட்டத்தை ஐரோப்பிய ஒன்றியம் ரத்து செய்திருந்தது.

நிபந்தனைகளுக்கு உட்படுவதாக தெரிவித்து புதிய அரசாங்கம் மீளவும் சலுகைத் திட்டத்தை பெற்றுக் கொள்ளும் முயற்சியில் இறங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment