Wednesday, September 16, 2015

சந்திரிகாவும் போர்க் குற்றவாளி தான்: சொல்கிறார் முன்னாள் புலிகளின் கொலையாளி அனந்தி சசிதரன்!!

 
Wednesday, September 16, 2015
புலிகள் போர்க் குற்றவாளியாக இல்லையாம்: புலிகள் கொலைகளே செய்யவில்லையாம்:  சந்திரிகாவும் போர்க் குற்றவாளி தான்: சொல்கிறார் முன்னாள் புலிகளின்   கொலையாளி அனந்தி சசிதரன்!!
 
நல்லாட்சித் தத்துவம் எனக் கூறிக்கொண்டு சமாதானப் புறாவாக வலம்வருகின்ற முன்னாள் ஜனாதிபதி சந்தி ரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் போர்க் குற்றவாளி தான் என்று தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பின் வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்தார்.

சர்வதேச விசாரணையை வலியுறுத்தி கிளிநொச்சியில் ஆரம்பிக்கப்பட்ட நடைப் பயணம் நேற்று யாழ்ப்பாணத்தை வந்தடைந்து நிறைவுபெற்றது. இந்நிலையில் இந்தப் பேரணியில் கலந்துகொண்டு ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடுகையிலேயே அவர்  மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும்  தெரிவிக்கையில்;

இலங்கை அரசின் உள்நாட்டுப் பொறிமுறை பலவற்றிலும் நான் தோற்றியிருக்கின்றேன். போர் முடிவடைந்து ஆறு வருடங்கள் கடந்த நிலையிலும் உள்நாட்டுப் பொறிமுறை மூலமாக எதுவும் நடக்கவில்லை. எந்தவித முடிவுகளும் எட்டப்படவில்லை. யாரிடம் இருந்தும் ஆறுதல் கிடைக்கவில்லை.

இந்த நிலையிலேயே சர்வதேச விசாரணையைக் கோரியிருக்கின்றோம். இந்த விசாரணையைக் கோருகின்ற ஐ.நா.விலேயே நான் கடந்த வருடம் எமது பிரச்சினைகளைத் தெரிவித்து அதற்காக நீதியைக் கோரி உரையாற்றியிருக்கின்றேன்.
ஆனால் இன்று வரைய இலங்கைஅரசின் போர்க்குற்றம் தொடர்பில் எதனையும் வெளிப்படுத்தாமலேயே ஐக்கிய நாடுகள் சபை இயங்கிக் கொண்டிருக்கின்றது.

இருந்த போதும் எமக்கு (புலிகளுக்கு) இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதியைப் பெற்றுக் கொள்வதற்காக நாங்கள் உள்நாட்டுப் பொறிமுறையை நிராகரித்து சர்வதேச பொறிமுறையை வலியுறுத்திக்கொண்டிருக்கின்றோம்.
 
இந்நிலையிலேயே எமக்கான (புலிகளுக்கு) நீதியைக் கோரி நடைப் பயணப்  போராட்டத்தை மேற்கொண்டிருக்கின்றோம். இந்தப் போராட்டம் யாழ்ப்பாணத்தை வந்தடைந்த போது செம்மணியில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தியிருந்தோம்.இந்தப் படுகொலைகளுக்குக் காரணமானவர் இன்று சமாதானப் புறாவாக  சுற்றித் திரிகின்ற முன்னாள் ஐனாதிபதி சந்திரிகா அம்மையாரே. இவரையும் ஒரு போர்க் குற்றவாளியாகவே நாம் கருதுகிறோம்.(புலிகள் போர்க் குற்றவாளியாக இல்லையாம்,,சொல்கிறார் முன்னாள் புலிகளின்   கொலையாளி அனந்தி சசிதரன்!!

இந்த சந்திரிகா அம்மையாரும் ரணில் விக்கிரமசிங்கவும் மிகத் திறமையானவர்கள் என்று மேற்குலகம் கருதுகிறது. ஆனால் இவர்கள் எல்லோரையும் இன அழிப்பில் ஈடுபட்டவர்களாகவே நாம் பார்க்கின்றோம்.
 
 எனவே நாம் இப்போதும் கேட்கின்றோம். தமிழ்நாட்டிலும் புலம்பெயர் தேசங்களிலும் எமக்காதரவான குரல்களைக் கொடுங்கள். அந்த வகையில் எமக்காதரவான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
 
இதனால் (புலிகளுக்கு) ஆதரவுத் தளம் பெருகி வருகின்றது. நிச்சயமாக சர்வதேச விசாரணையொன்று மேற்கொள்ளப்பட்டு அதனூடாக நீதி கிடைக்க வேண்டும். இதுவே புலிகளின் அனைத்து  எதிர்பார்ப்பாக இருக்கின்றது.

இந்தப் போராட்டத்தை நாம் மேற்கொண்டபோது பல அச்சுறுத்தல்கள், தடைகள் எற்படுத்தப்பட்டபோதும் அவற்றையெல்லாம் தாண்டி எமக்கான நீதி வேண்டிய போராட்டத்தை தொடர்ந்திருக்கின்றோம். இவ்வாறு நாம் அச்சுறுத்தி மிரட்டப்படுவதா நல்லாட்சித் தத்துவம் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.முன்னாள் புலிகளின்   கொலையாளி அனந்தி சசிதரன்!!

No comments:

Post a Comment