Tuesday, September 15, 2015

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ரணில்!



இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்திய தலைநகர் புது டெல்ஹியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச வாநூர்தி நிலையத்தை சென்றடைந்துள்ளார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் அவரது 16 உறுப்பினர்களைக் கொண்ட குழுவிற்கும் விசேட வரவேற்பு நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக விசேட செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
 
அவரை வாநூர்தி நிலையத்தில், இந்திய மத்திய வர்த்தக வாணிப அமைச்சர் சீத்தாரம் வரவேற்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி பிரணாப் முக்கர்ஜி மற்றும் வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உட்பட பல தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக பிரதமர் செயலகம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment