Friday, September 4, 2015

முன்னாள் பாதுகாப்புச் செய லாளர் கோட்டாபய ராஜபக்ஷவிடம் பாரிய மோசடி தடுப்பு ஜனாதிபதி ஆணைக்குழு 4 மணித்தியாலங்கள் விசாரணை!

Friday, September 04, 2015
முன்னாள் பாதுகாப்புச் செய லாளர் கோட்டாபய ராஜபக்ஷவிடம் பாரிய மோசடி தடுப்பு ஜனாதிபதி ஆணைக்குழு 4 மணித்தியாலங்கள் விசாரணை மேற்கொண்டுள்ளது.
நிதி மோசடி சம்பவம் தொடர்பில் வாக்கு மூலம் பதிவு செய்வதற்காக கோட்டாபய ராஜபக்ஷ நேற்று காலை 9.30 மணிக்கு ஆணைக் குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தார்.
பகல் 1.30 மணி வரை அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டிரு ந்தது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் விசாரணைகள்மேற்கொள்ள வேண்டி இருப்பதனால் இன்றும் பாரிய மோசடி தடுப்பு ஜனாதிபதி ஆணைக்குழு முன் ஆஜராகு மாறு கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
கோட்டாபய ராஜபக்ஷ தவிர மேலும் 09 பேர் நேற்று பாரிய மோசடி தடுப்பு ஜனாதிபதி ஆணைக்குழுவினால் விசார ணைக்கு அழைக்கப்பட்டிருந் ததுடன், அவர்களையும் இன்று மீண்டும் ஆஜராகுமாறு பணிக்கப்பட் டுள்ளது. 

No comments:

Post a Comment