Tuesday, August 18, 2015

புதிய அரசாங்கத்தின் நல்ல கொள்கைகளுக்கு ஆதவரளிக்கப்படும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ!

புதிய அரசாங்கத்தின் நல்ல கொள்கைகளுக்கு ஆதவரளிக்கப்படும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ சர்வதேச ஊடகமொன்றுக்கு தொலைபேசி மூலம் அறிவித்துள்ளார்.
 
வெளியாகி வரும் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் மஹிந்த தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினால் வெற்றியீட்டக் கூடிய சாத்தியம் அரிதாகி வருவதாக ரொய்ட்டர்ஸ்செய்தி வெளியிட்டுள்ளது. “புதிய அரசாங்கத்தின் நல்ல திட்டங்களை ஆதரிப்பேன் அதேவேளை, பிழையான திட்டங்களை எதிர்ப்பேன்” என மஹிந்த தெரிவித்துள்ளார்.
 
நிருபமா ராஜபக்‌ஷ தோல்வி!
 
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் நிருபமா ராஜபக்ஷ பொதுத்தேர்தலில் தோல்வியடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் சமல் ராஜபக்‌ஷ, நாமல் ராஜபக்ஷ, மஹிந்த அமரவீர, டி.எச் சானக்க ஆகியோர் இம்முறை பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது
 

No comments:

Post a Comment