Tuesday, August 18, 2015

சுரேஷ் பிரேமச்சந்திரனும் தோல்வி!!!

யாழ். மாவட்டத்தில் போட்டியிட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமசந்திரன் நடந்து முடிந்த பொதுத்தேர்தலில் தோல்வியடைந்துள்ளார்.
 
தமிழ் தேசிய கூட்டமைப்பு இம்முறை இங்கு ஐந்து ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.
அத்துடன், டக்ளஸ் தேவானந்தா, விஜயகலா மகேஷ்வரன் ஆகியோரும் முறையே ஈபிடிபி, ஐ.தே.க ஆகிய கட்சிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர்
 
சின்ன தெளபீக், நஜீப் அப்துல் மஜீதையும் மக்கள் நிராகரிப்பு!
 
திருகோணமலை மாவட்டத்தில் இம்முறை முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தெளபீக் (சின்ன தெளபீக்) தோல்வியைத் தழுவியுள்ளார்.
 
இவருக்கு 26,716 வாக்குகளே கிடைத்துள்ளன.
அத்துடன், இம்மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் போட்டியிட்ட, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீதையும் இம்முறை மக்கள் நிராகரித்துள்ளனர்.
இவர் வெறும் 4877 வாக்குகளையே இம்முறை பெற்றிருக்கிறார்
 
மங்களவை பின் தள்ளினார் புத்திக!

மாத்தறை மாவட்டத்தில் ஐ.தே.க.சார்பில் போட்டியிட்ட புத்திக பத்திரன கூடுதல் விருப்பு வாக்குகளைப் பெற்று முன்னிலையில் உள்ளார்.
இவர் 98,815 விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார்.
 
அதற்கு அடுத்த இரண்டாம் ஸ்தானத்தில் உள்ள ஐ.தே.கவின் மங்கள சமரவீர 96082 விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ள அதேநேரம், சாகல ரத்நாயக்கா 86772 விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார்.
இம்மாவட்டத்தில் ஐ.தே.க. 03 ஆசனங்களையும், சுதந்திர முன்னணி 05 ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளன

No comments:

Post a Comment