Thursday, August 27, 2015

தேசிய அரசாங்கத்தை உருவாக்குவதற்கு இணக்கப்பாடு: மலிக் சமரவிக்ரம!

Thursday, August 27, 2015
தேசிய அரசாங்கத்தை உருவாக்குவதற்கு இணக்கப்பாடு காணப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.

அதன் தவிசாளர் மலிக் சமரவிக்ரம இதனைத் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா சுதந்திர கட்சியுடன் இடம்பெற்ற ஆழமான பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் இந்த இணக்கம் காணப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், தேசிய அரசாங்கத்தின் கீழான அமைச்சரவை எதிர்வரும் 2ம் திகதியே பதவி ஏற்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றம் முழுவதையும் அரசாங்கமாக மாற்றுவதற்கான திட்டம் குறித்து ஐக்கிய தேசிய கட்சி வலியுறுத்தி வந்தது.

இதற்காக இரண்டு வருடங்களுக்கேனும் தேசிய அரசாங்கத்தை உருவாக்க கோரியிருந்த நிலையில், இது தொடர்பில் இடம்பெற்ற சுமூகமானதும், ஆழமானதுமான பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் இதற்கான இணக்கப்பாடு காணப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment