Thursday, August 27, 2015

சோனியாவுக்கு எதிரான 1984 சீக்கிய கலவரவழக்கு அமெரிக்க கோர்ட் தள்ளுபடி!

Thursday, August 27, 2015
நியூயார்க்: 1984-ம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிராக நடந்த கலவரத்தில் காங். தலைவர் சோனியாவுக்கு தொடர்பிருப்பதாக கூறி அமெரிக்கா கோர்ட்டில் சீக்கியர்களுக்கான நீதி என்ற அமைப்பு வழக்கு தொடர்ந்தது.
 
மனித உரிமை மீறல் நடந்ததாக சோனியா மீது நடந்த வழக்கில் கடந்த 2014-ம்ஆ ண்டு ஜுன்மாதம் கீழ் கோர்ட் வழக்கை தள்ளுபடிசெய்தது. இதனை எதிர்த்து நியூயார்க் கோர்ட்டில் சீக்கியர்களுக்கான நீதி அமைப்பு அப்பீல் செய்தது. இந்த வழக்கை இன்று (ஆக.26) நீதிபதிகள் ஜோஸ் கேர்பரேன்ஸ், ரென்னா ராகி மற்றும் ரிச்சர்ட் ஆகியோர் கொண்ட பெஞ்ச விசாரித்தது. கீழ் கோர்ட் உத்தரவை உறுதி செய்து வழக்கை தள்ளுபடி செய்தனர்.

No comments:

Post a Comment