Sunday, August 16, 2015
சுமார் 54 பயணிகளுடன் காணாமல் போன இந்தோனேசிய விமானத்தின் சிதைவுகள்
பப்புவா பிராந்தியத்தின் பிந்தங்கிய பகுதியொன்றில்
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ட்ரைகானா விமானச் சேவைக்குச் சொந்தமான மேற்படி விமானம் பப்புவா பிராந்திய தலைநகரான ஜயபுராவிலிருந்து ஒக்ஸிபில்லை நோக்கி பயணித்திருந்தது.
பின்னர் விமானம் கட்டுப்பாட்டறையுடனான தொடர்பை இழந்திருந்தது.
இந்நிலையில் விமானத்தில் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
ஒக்ஸ்பில்லின் , பின் டாங் பகுதியிலேயே விமானத்தின் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மலைப் பகுதியில் வைத்தே விமானத்தின் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், அப்பகுதி மக்களே இது தொடர்பில் அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேற்படி சம்பவத்தில் எவரும் உயிர் பிழைத்துள்ளனரா என்பது தொடர்பில் தகவலெதுவும் தெரியவரவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
44 பயணிகள் , 5 குழந்தைகள் மற்றும் 5 விமானப் பணியாளர்கள் விமானத்தில் பயணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ட்ரைகானா விமானச் சேவைக்குச் சொந்தமான மேற்படி விமானம் பப்புவா பிராந்திய தலைநகரான ஜயபுராவிலிருந்து ஒக்ஸிபில்லை நோக்கி பயணித்திருந்தது.
பின்னர் விமானம் கட்டுப்பாட்டறையுடனான தொடர்பை இழந்திருந்தது.
இந்நிலையில் விமானத்தில் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
ஒக்ஸ்பில்லின் , பின் டாங் பகுதியிலேயே விமானத்தின் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மலைப் பகுதியில் வைத்தே விமானத்தின் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், அப்பகுதி மக்களே இது தொடர்பில் அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேற்படி சம்பவத்தில் எவரும் உயிர் பிழைத்துள்ளனரா என்பது தொடர்பில் தகவலெதுவும் தெரியவரவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
44 பயணிகள் , 5 குழந்தைகள் மற்றும் 5 விமானப் பணியாளர்கள் விமானத்தில் பயணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment