Sunday, August 16, 2015

தேர்தல் அறிவிக்கப்பட்ட தினம் முதல் இதுவரை காவற்துறை தேர்தல் கண்காணிப்பு பிரிவிற்கு 364 முறைப்பாடுகள்!

Sunday, August 16, 2015
தேர்தல் பிரசார பணிகள் நிறைவடைந்த கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் இதுவரை தேர்தல் சட்ட திட்டங்களை மீறிய 9 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இது தொடர்பில் 22பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக  காவற்துறை ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தேர்தல் தொடர்பில் 11 முறைப்பாடுகளும் கிடைக்க பெற்றுள்ளன.

தேர்தல் அறிவிக்கப்பட்ட தினம் முதல் இதுவரை காவற்துறை தேர்தல் கண்காணிப்பு பிரிவிற்கு 364 முறைப்பாடுகள் கிடைக்க பெற்றுள்ளன.

இதேவேளை தேர்தல் பெறுபேறு வெளியானதன் பின்னர் ஒருவார காலப்பகுதியினில் பேரணிகள்  நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
           

No comments:

Post a Comment