Sunday, August 17, 2015
இன்று நடைபெறுகின்ற தேர்தலை கண்காணிப்பதற்காக 31 ஆயிரத்துக்கும் அதிகமான உள்ளூர் மற்றும் சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்கள் நாடு முழுவதிலும் சேவையில் ஈடுபட்டுள்ளனர்.
பவ்ரல் அமைப்பின் சார்பில் 14000 பேரும், கபே அமைப்பின் சார்பில் 8700 பேரும், தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையத்தின் சார்பில் 6700 பேரும், தேசிய தேர்தல் கண்காணிப்பு நிலையத்தின் சார்பில் 1000ற்கும் அதிகமானவர்கள் உள்ளடங்கலாக சுமார் 31000 உள்ளூர் தேர்தல் கண்காணிப்பாளர்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதனைவிட ஐரோப்பிய ஒன்றியம், பொதுநலவாய அமைப்பு, ஆசிய தேர்தல் கண்காணிப்பு அமைப்பு மற்றும் சீ.எம்.ஈ.வி அமைப்பின் வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்கள் உள்ளடங்கலாக 130ற்கும் அதிகமானவர்கள் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இலங்கை தேர்தல் வரலாற்றில் அதி கூடுதலான சர்வதேச கண்காணிப்பாளர்கள் பங்கெடுக்கும் தேர்தலாக இம்முறை தேர்தல் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்
No comments:
Post a Comment