Monday, June 15, 2015

தற்போதைய நிலையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ போன்ற தலைவர்கள் நாட்டிற்கு தேவை: சரத் என் சில்வா!

Monday, June 15, 2015
தற்போதைய நிலையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ போன்ற தலைவர்கள் நாட்டிற்கு தேவையென முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்துள்ளார்.
 
கேகாலையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த அவர், இதனைக் கூறியுள்ளார்.
 
மைத்திரியை ஜனாதிபதியாக தெரிவு செய்யவே மக்கள் வாக்களித்தனர். ரணிலை பிரதமராக்க மக்கள் வாக்களிக்கவில்லை. தற்போது நாட்டில் காணப்படும் அச்சாறு போன்ற ஆட்சியை விரும்பவில்லை.
 
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த மூன்றாவது முறையாக தேர்தலில் போட்டியிடுவதை மாத்திரமே எதிர்த்தேன். மஹிந்தவுக்கு எதிராக செயற்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment