Wednesday, May 20, 2015

இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ். கச்சேரிக்கு முன்னால் ஆர்ப்பாட்டம்!

Wednesday, May 20, 2015
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கோரப் படுகொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், கொலையாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தி யாழ்ப்பாணம் கச்சேரிக்கு முன்னால் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் பெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று காலையில் இருந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் யாழ்ப்பாண ஆசிரிய மாணவ சமூகத்தினர், கல்வியலாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், மதத் தலைவர்கள் என்று பலரும் பங்கேற்று வருகின்றனர்.

No comments:

Post a Comment