Tuesday, February 17, 2015

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை எதிர்வரும் பொதுத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக நிறுத்த வேண்டும் என கோரிக்கை!

Tuesday, February 17, 2015
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை எதிர்வரும் பொதுத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக நிறுத்த வேண்டும் என சில தரப்பினரால் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
 
இந்த நிலையில், மகிந்த ராஜபக்சவே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்பட வேண்டும் என அந்த கட்சியின் பியமக தொகுதி மத்திய அதிகார சபை இன்று ஒருமனதாக தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது.
 
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய தேசிய அமைப்பாளர் சுசில் பிரேமஜயந்த இந்த கூட்டத்திற்கு பிரதம அதிதியாக அழைக்கப்பட்டிருந்தார். கூட்டத்தில் சுமார் ஆயிரம் பேர் கலந்து கொண்டிருந்தனர்.

No comments:

Post a Comment