Tuesday, February 17, 2015

மகிந்த ராஜபக்சவை மீண்டும் அரசியலுக்கு கொண்டு வரும் நோக்கத்தில்: மகிந்தவுக்கு ஆதரவான கூட்டத்தில் சுதந்திர கட்சியினர் பலர் கலந்து கொள்வர்: உதய கம்மன்பில!

Tuesday, February 17, 2015      
மகிந்த ராஜபக்சவை மீண்டும் அரசியலுக்கு கொண்டு வரும் நோக்கத்தில் நுகேகொடை பிரதேசத்தில் நாளை நடைபெறும் கூட்டத்தில் சுதந்திரக் கட்சியை சேர்ந்த 40க்கும் அதிகமான மாகாண சபை உறுப்பினர்கள் கலந்து கொள்வது நிச்சயம் என பிவித்துரு ஹெல உறுய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
 
மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவர் தினேஷ் குணவர்தன, ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ஸ, பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில ஆகியோர் இணைந்து இந்த கூட்டதை ஒழுங்கு செய்துள்ளனர்.
 
இந்த கூட்டத்திற்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என அதன் பொதுச் செயலாளர் அனுரபிரிய தர்ஷன யாப்பா ஏற்கனவே கூறியுள்ளார்.
 
அதேவேளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மனசாட்சியின்படி செயற்படுமாறு கூறியுள்ளதாகவும் இதனால், தான் நுகேகொடை கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளதாக மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன குணவர்தன தெரிவித்துள்ளார்.
 
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் பிரதமர் வேட்பாளராக போட்டியிட தகுதியானவர்கள் எவரும் இல்லை என்பதால், மகிந்த ராஜபக்சவை மீண்டும் அரசியலுக்கு கொண்டு வந்து தேர்தலில் போட்டியிட வேண்டும் என அந்த கட்சியினர் சிலர் வலியுறுத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment