Friday, February 27, 2015

ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி, ஐக்­கிய தேசியக் கட்சி ஒன்­றி­ணைந்த தேசிய அர­சாங்கம் தொடர்ந்தும் கொண்டு செல்­லப்­ப­டு­மாயின் பாரா­ளு­மன்­றத்தில் எதிர்க்­கட்­சி­யாக தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பு உரு­வெ­டுக்கும்: உதய கம்­மன்­பில!

Friday, February 27, 2015
ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி, ஐக்­கிய தேசியக் கட்சி ஒன்­றி­ணைந்த தேசிய அர­சாங்கம் தொடர்ந்தும் கொண்டு செல்­லப்­ப­டு­மாயின் பாரா­ளு­மன்­றத்தில் எதிர்க்­கட்­சி­யாக தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பு உரு­வெ­டுக்கும்.
 
அமர்­த­லிங்­கத்­தினால் ஏற்­பட்ட அச்­சு­றுத்தல் இனி ஒரு போதும் இடம்­பெற அனு­ம­திக்­கக்­கூ­டாது என தெரி­விக்கும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் பங்­கா­ளிக்­கட்­சி­யான தூய்­மை­யான ஹெல உறு­மய யாருக்கும் திறக்­காத சர்­வ­தேச கத­வுகள் எதிர்க்­கட்­சிக்­காக திறக்கும் அதற்­காக தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு காத்­தி­ருப்­ப­தா­கவும் தெரி­வித்தது.
 
முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவை மீண்டும் அர­சியல் மேடைக்கு கொண்­டு­வரும் முயற்­சியில் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் பங்­காளிக் கட்­சி­களின் தலை­வர்­களான வாசு­தேச நாண­யக்­கார, தினேஸ் குண­வர்த்­தன, உதய கம்­மன்­பில, மொஹமட் முசம்மில் ஆகி­யோ­ரினால் மேற்­கொள்­ளப்­பட்ட செய்­தி­யாளர் சந்­திப்பு நேற்று முன்தினம் கொழும்பில் இடம்­பெற்­றது. இதன் போது கருத்து தெரி­வித்த தூய்­மை­யான ஹெல உறு­மய கட்­சியின் பொதுச் செய­லாளர் உதய கம்­மன்­பில கருத்து தெரி­விக்­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர் மேலும் குறிப்­பிட்­ட­தா­வது;
 
அர­சியல் குழப்­பங்கள் நாளுக்கு நாள் அதி­க­ரித்­துக்­கொண்டே செல்­கின்­றன பிர­தான இரண்டு கட்­சி­களும் ஒன்­றி­ணைந்து புதிய அர­சாங்­கத்­தினை உரு­வாக்­கி­யுள்­ளன. ஐக்­கிய தேசியக் கட்­சியின் இருக்­க­மான கூண்­டினுள் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி சிக்­கிக்­கொண்­டுள்­ளது. இது நாட்­டிற்கு பாரிய அச்­சு­றுத்­த­லா­கவே அமையும். பிரதா­ன இரு கட்­சி­களும் ஒன்­றி­ணைந்து அர­சாங்­கத்­தினை அமைப்­பதால் பாரா­ளு­மன்றில் எதிர்க்­கட்­சி­யாக தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு உரு­வாகும். 1983 இல் தமிழ் மக்­க­ளுக்கு எதி­ராக சிங்­க­ள­வர்கள் கல­வ­ர­மொன்­றினை நடத்­தினர். இதில் குறிப்­பிட்ட அளவு தமிழ் மக்கள் பாதிக்­கப்­பட்­டனர். அப்­போது பாரா­ளு­மன்றில் எதிர்க்­கட்சி தலை­வ­ராக இருந்த தமிழர் விடு­தலை கூட்­ட­ணியின் அமிர்­த­லிங்கம் இவ்­வி­ட­யத்­தினை சர்­வ­தேசம் வரை கொண்டு சென்றார்.
 
இதனால் ஏற்­பட்ட விளை­வு­க­ளுக்கு இன்­று­வரை எம்மால் பதில் சொல்­ல­மு­டி­யா­துள்­ளது. அவ்­வா­றா­ன­தொரு நிலையில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு எதிர்­பார்க்கும் விட­யங்­களை சர்­வ­தேசம் வரை கொண்டு சென்று நாட்டை சீர­ழித்­து­விடும்.
 
யாருக்­கா­கவும் திறக்­காத கத­வுகள் எதிர்க்கட்சிக்காக திறக்கும். அதுவும் பிரிவினைவாதிகளுக்காக சர்வதேச கதவுகள் எப்போதும் திறக்கும்.
 
எனவே, நாட்டை பிரிவினைக்குட்படுத்தாது சரியான கட்சி அரசியலை மேற்கொள்ள வேண்டுமாயின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தனித்து இயங்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment