Friday, January 09, 2015
ஜனாதிபதி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தேர்தல் முடிவினை ஏற்றுக் கொண்டமை வரவேற்கப்பட வேண்டியது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
புதிதாக தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து செயற்பட விரும்புகின்றோம்.
அமைதியான முறையில் தேர்தல் நடத்தப்பட்டமைக்காக இலங்கை தேர்தல் ஆணையாளர் மற்றும் பாதுகாப்பினை பாராட்டுகின்றோம் என ஜோன் கெரி தெரிவித்துள்ளார்
புதிய ஜனாதிபதி மைத்திரிபாலவின் தேர்தல் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்துக்கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார். நேற்றைய தினம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஏற்றுக்கொண்ட விதம் பாராட்டுக்குரியது என அவர் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment