Sunday, January 25, 2015

சாய்ந்தமருதில் இடம்பெற்ற நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் கூட்டத்தில் கைகலப்பு, இடைநடுவே நிறுத்தம்!

Sunday, January 25, 2015
நல்லாட்சிக்கான தேசிய முன்னணியினால் ”தற்போதைய அரசியல் நிலவரமும், நல்லாட்சிக்கான எமது பங்களிப்பும்” எனும் தலைப்பில் சாய்ந்தமருது பரடைஸ் வரவேற்பு மண்டபத்தில்  (24) மாலை கூட்டம் இடம்பெற்றது.
 
எஸ்.முபாரக் ஆசிரியர் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தின் இடைநடுவே நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பிரச்சார செயலாளர் சிராஜ் மஸ்ஹுர் உரையாற்றிக்கொண்டிருக்கும் போது சபையில் இருந்தவா்களினால் கேள்விகள் கேட்கப்பட்டதால் சிறிது நேரம் அமைதியின்மை ஏற்பட்டது. 
 
குறித்த அமைதியின்மையின் காரணமாக கூச்சல், குழப்பம், கைகலப்பு ஏற்பட்டதுடன் வரவேட்பு மண்டபத்தின் கண்ணாடிகளும் உடைக்கப்பட்டதுடன் கதிரைகளும் உடைக்கப்பட்டன. 
 
நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் உரையாற்ற இருந்த வேளையில் தொடராக இடம்பெற்ற அமைதியின்மையின் காரணமாக கூட்டம் இடைநடுவே கைவிடப்பட்டது. 
சாய்ந்தமருது அரசியல்வாதியின் ஆதரவாளர்களே கூட்டத்தை தொடர அனுமதிக்காமல் இடையூறு விளைவித்ததாக சபையில் கூடியிருந்தவர்களால் பேசப்படுவதை அவதானிக்க முடிந்தது. பின்னர் கல்முனை பொலிசார் வரவழைக்கப்பட்டு நிகழ்வுக்கு வருகைதந்த நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் உள்ளிட்ட குழுவினரை பாதுகாப்பாக அனுப்பிவைக்கப்பட்டனர்.

No comments:

Post a Comment