Sunday, January 25, 2015

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையில் பொதுத் தேர்தலில் போட்டியிடத் திட்டமிடும் கூட்டணிக் கட்சிகள்!

Sunday, January 25, 2015
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் பங்காளிகளாக இருக்கும் கட்சிகள் வரும் பொதுத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையில் போட்டியிடத் திட்டமிட்டுள்ளன. இந்தக் கூட்டணி பிரதான பங்காளிக் கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பயன்படுத்திய வெற்றிலை சின்னத்தையே தமது சின்னமாகப்
 
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதான கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக மைத்திரிபால சிறிசேன தெரிவானார். இதையடுத்து வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உண்மையான சின்னமான கை சின்னத்திலேயே போட்டியிட ஆர்வம் காட்டப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தற்போது எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் நிமால் சிறிபால டிசில்வாவுக்கு கூட்டணிக் கட்சிகள் பெரும் எதிர்ப்பை வெளியிட்டன.
 
இதையடுத்து கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் அண்மையில் சபாநாயகர் சமல் ராஜபக்‌ஷவை சந்தித்து தாங்கள் நாடாளுமன்றில் தனித்து இருக்க முடிவு செய்துள்ளனர் எனத் தெரிவித்தனர். சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களுள் ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில்: "கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்‌ஷ தோல்வியடைந்தாலும் அவருக்குக் கிடைத்த 57 இலட்சம் வாக்குகளுக்கு மேல் கிடைத்த மக்கள் ஆணையைக் குறைத்து மதிப்பிட்டு விட முடியாது. இந்த வாக்குகளை நானோ அல்லது விமல் வீரவன்ஸவோ, நிமால் சிறிபால டிசில்வாவோ அல்லது வேறு யாருமே பெற முடியாது.
 
வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஜனாதிபதி மைத்திரி வழிகாட்டலின் கீழ் போட்டியிடவுள்ளது. எனினும் முன்னணியின் பெரும்பாலான கட்சிகள் அந்த முன்னணியில் போட்டியிட விரும்பவில்லை. எனவே நாம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் கீழ் போட்டியிடவே விரும்புகிறோம். கட்சி பற்றிய முடிவு இன்னும் உறுதியாகவில்லை என்றாலும் அவரின் தலைமையின் கீழேயே பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட விரும்புகிறோம்" என்றார்.
 
புதிய அரசியல் கூட்டமைப்பிற்கு தலைமை தாங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலின் போது போட்டியிடுவதற்கு புதிய அரசியல் கூட்டமைப்பு ஒன்று இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளது.
 
சில அரசியல் கட்சிகள் கூட்டாக இணைந்து தேர்தலில் போட்டியிட திட்டமிட்டுள்ளன.
மக்கள் ஐக்கிய முன்னணி, கம்யூனிஸ்ட் கட்சி, சமசமாஜ கட்சி, பிவித்துரு ஹெல உறுமய, தேசிய சுதந்திர முன்னணி ஆகிய கட்சிகள் ஒன்றிணைந்து போட்டியிடுவது குறித்து ஆராய்ந்து வருகின்றன.
பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை இந்த கூட்டணியில் இணைத்து கொள்வது குறித்தும் பேசப்பட்டு வருகின்றது.
 
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் சிலரும், ஓய்வு பெற்ற சிரேஸ்ட இராணுவ அதிகாரிகள் சிலரும் தேர்தலில் வேட்பாளர்களாக களமிறக்கப்பட உள்ளனர்

No comments:

Post a Comment