Tuesday, January 20, 2015

எனது கட்சி ஆதரவாளர்களது எதிர்பார்ப்புக் களை நான் நிறைவு செய்வேன்:முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ!

Tuesday, January 20, 2015
இலங்கை::
எனது கட்சி ஆதரவாளர்களது எதிர்பார்ப்புக்களை நான் நிறைவு செய்வேன் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்
 
இன்று கண்டி ஸ்ரீ தலதா மாளிகை , அஸ்கிரிய மற்றும் மல்வத்தை பீடங்களுக்கு சென்று சமயக் கிரிகைகளில் ஈடுபட்டதன் பின் அவர் ஊடகங்களுக்கு மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்:-

எனது தந்தையின் காலம் முதல் எனது குடும்பம் அரசியல் செய்து வருகிறது. வெள்ளையர்கள் ஆட்சியிலும் நாம் அரசியல் செய்தவர்கள். 1931 ஆம் ஆண்டு எனது தந்தை அரசியல் செய்தது முதல் இன்று வரை நாம் பல்லாண்டுகாலம் தொடாந்து அரசியல் செய்கிறோம். 
 
ஆனால் எமது வீடுகளை பொலிஸார் முற்றுகையிட்டதில்லை.தற்போதைய ஆட்சியில் எனது வீடு சோதனை செய்யப்பட்டது. ஆனால் அங்கு எதுவும் இருக்கவில்லை. எமது நாட்டைப் பொறுத்தவரை இதனை விட உயர்ந்த ஒரு அரசியல் கலாசாரமும் அரசியல் ஒழுக்கமும் தேவைப் படுகிறது.

நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் அரசியல் பழிவாங்கல்களை உடன் நிறுத்துமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அப்பாவி மக்கள் இதனை எதிர்பார்த்து வாக்களிக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மக்களின் தேவைக்காக தான் எப்போதும் முன்நிற்பதாக மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.

மக்கள் நம்பிக்கையுடன் வாக்களித்ததாகவும் அவர்களுக்கு இடையூறு ஏற்படுத்துவது கூடாது என்றும் அரசியல் ஒழுக்கம் இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

எனது கட்சி ஆதரவாளர்களது எதிர்பார்ப்புக்களை நாம் எதிர்காலத்தில் நிறைவேற்றுவோம். யாரும் மனம் தளரத் தேவையில்லை. சற்று பொறுமையாக இருக்கும்படி வேண்டுகிறேன் என்றார்.

1 comment:

  1. http://www.worldcup2015livenews.com/
    http://www.valentinesday2015giftideas.com/
    http://www.republicday2015speech.com/

    ReplyDelete