Monday, January 19, 2015
இலங்கை::சிவில் விமான அமைச்சின் கீழ் நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்கள் இருப்பின் அவற்றை உடனடியாக நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சிவில் விமான சேவைகள் ராஜாங்க அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
இலங்கை::சிவில் விமான அமைச்சின் கீழ் நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்கள் இருப்பின் அவற்றை உடனடியாக நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சிவில் விமான சேவைகள் ராஜாங்க அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
இன்று காலையில் நடைபெற்ற அமைச்சுப் பொறுப்பை ஏற்கும் நிகழ்விலேயே இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் ஆட்சியில் ஊழலுக்கு மோசடிகளுக்கோ, குடும்ப ஆட்சிக்கோ பழிவாங்கலுக்கோ இடமிருக்காது. ஆனால் கடந்த காலத்தில் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டோருக்கான தண்டனை பெற்றுக் கொடுக்க தயங்க மாட்டோம்.
மத்தள விமான நிலையம் நஷ்டத்தில் இயங்குவதால் அதனை மூடிவிடும்படி விமான சேவைகள் அதிகார சபை உத்தரவிட்டுள்ளது. இதன் முழு விபரமும் எதிர் காலத்தில் பகிரங்கப்படுத்தப்படும். அத்துடன் அமைச்சில் என்து உறவினர் எவருக்கும் இடமளிக்கமாட்டோம் என்பதை உறுதியாக சொல்லிக் கொள்கிறேன். ஜனாதிபதி மைத்திரியின் ஆட்சியில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.

No comments:
Post a Comment