Sunday, January 25, 2015

அரசாங்கத்தில் இருந்து விலகுவதாக பைசர் அச்சுறுத்துகிறாராம்!!

Sunday, January 25, 2015
சிறிலங்கன் விமான சேவையின் புதிய தலைவர் நியமிப்பு தொடர்பில், அமைச்சர் பைசர் முஸ்தபா அரசாங்கத்தில் இருந்து விலகவிருப்பதாக அச்சுறுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.


ஐக்கிய தேசிய கட்சியின் தகவல்கள் இதனைத் தெரிவிக்கின்றன. சிறிலங்கன் விமான சேவைக்கான புதிய தலைவர் அஜித் டயஸ் நியமிக்கப்பட்டார்.பிரதமர் ரணில்விக்ரமசிங்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டது.


எனினும் இது குறித்து இறுதி நேரத்திலேயே தமக்கு அறிவிக்கப்பட்டதாவும், விமான சேவைகளுக்கான அமைச்சராக இருந்த போதும் தமக்கு தெரியாமல் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

No comments:

Post a Comment