Sunday, January 25, 2015

மீட்கப்பட்ட 53 வாகனங்கள் குறித்து லலித் வீரதுங்க விளக்கம்

Sunday, January 25, 2015
புறக்கோட்டை ஸ்ரீஜயவர்த்தனபுர பல்பொருள் கூட்டுறவு நிலையத்திற்கு சொந்தமான இடத்திலிருந்து மீட்கப்பட்ட வாகனங்கள் சேவையில் இருந்து நீக்கப்பட்டவை என முன்னாள் ஜனாதிபதி செயலாளர் தெரிவித்துள்ளார்.
 
கடந்த வௌ்ளிக்கிழமை ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான சேதமடைந்த புல்லட் புரூப் சொகுசு கார்கள் உட்பட 53 வாகனங்களை பொலிஸார் கைப்பற்றியிருந்தனர்.
 
இந்த நிலையில் முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலில் வீரதுங்க இது குறித்து கருத்து வெளியிடுகையில்,
 
அந்தப் பகுதியில் இருந்த வாகனங்கள் அதி உயர் பாதுகாப்புடையவை என்பதால் சந்தைகளில் விற்கவோ அல்லது ஏலத்தில் விடவோ அனுமதிக்கப்படவில்லை என லலித் வீரதுங்க சுட்டிக்காட்டினார்.
 
குறித்த வாகனங்களை நிறுத்தி வைப்பதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக ஒப்பந்த அடிப்படையில் அவற்றை குறித்த இடத்தில் நிறுத்தி வைத்திருந்ததாகவும், அந்த அனைத்து வாகனங்களிலும் பதிவுகள் இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment