Thursday, January 8, 2015

யாழ் 35%, வவுனியா 51%, மன்னார் 50%, முல்லை 59% ,கிளிநொச்சி 55%!!

Thursday, January 08, 2015
இலங்கை::வடக்கு மாகாணத்தில் இதுவரை வாக்களித்த வாக்காளர்களின் வீதத்தில் முல்லைத்தீவு மாவட்டம் முன்னிலை வகிக்கின்றது.

ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு காலை 7 மணி முதல் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.

இந்தநிலையில், இதுவரை வாக்களிப்பு வீதத்தின் அடிப்படையில் முல்லை மாவட்டத்தில் காலை 7மணி தொடக்கம் 1.30 மணிவரை   59 % வாக்குகளைப் பெற்று முன்னிலை வகிக்கின்றது.

அதேபோல, யாழ். மாவட்டத்தில் காலை 7மணி தொடக்கம் 2மணிவரை  35%வாக்குகளும் ,  வவுனியா மாவட்டத்தில் 7 மணி தொடக்கம் 2 மணிவரை 51% வாக்குகளும் , மன்னாரில் 50%வாக்குகளும் , கிளிநொச்சி மாவட்டத்தில் காலை 7 மணி முதல் 2 மணிவரை 55 % வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளதாக அந்தந்த மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்கள் அறிவித்துள்ளனர்.

யாழில் 20%, வவுனியா 28%,முல்லை 33%, மன்னார் 14%, கிளிநொச்சி 30%

யாழ். மாவட்டத்தில் இதுவரை 20 வீதமான வாக்குப்பதிவுகளே  மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகருமான சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்டத்தில் 4 இலட்சத்து 50 ஆயிரத்து 132 வாக்காளர்கள் 526 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களித்து வருகின்றனர்.

இந்தநிலையில், இன்று காலை 7மணியில் இருந்து இதுவரை 20வீதமான வாக்குகளே பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment