Thursday, January 29, 2015

2016ம் ஆண்டு டி20 உலக கோப்பை கிரிக்கெட் இந்தியாவில்: ஐசிசி அறிவிப்பு!

Thursday, January 29, 2015
சென்னை::2016 ஆம் ஆண்டுக்கான 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடத்தப்படும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அறிவித்துள்ளது.
 
துபாயில் இன்று நடைபெற்ற ஐசிசி கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
 
2016 மார்ச் 11ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 3ஆம் தேதி வரை போட்டி நடைபெறும் என்று ஐசிசி தெரிவித்துள்ளது.
 
இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படும் 20 ஓவர் கிரிக்கெட் உலக கோப்பை யை 2007ல் இந்தியாவும், 2009ல் பாகிஸ்தானும், 2010ல் மேற்கிந்திய தீவு அணியும், 2014ல் இலங்கையும் கைப்பற்றியுள்ளது.

No comments:

Post a Comment