Thursday, January 29, 2015

அரசாங்கத்தின், 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ்,இடைக்கால வரவு செலவு திட்டம்!

Thursday, January 29, 2015
இலங்கை::அரசாங்கத்தின், 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ், அரச சேவையாளர்களுக்கான வேதனம் 10 ஆயிரம் ரூபாவால் அதிகரிக்க இடைக்கால வரவு செலவு திட்டத்தில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

இதன் முதற்கட்டமாக, பெப்ரவரி மாதம் முதல் அரச சேவையாளர்களின் வேதனம் 5 ஆயிரம் ரூபாவால் உயர்த்தப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

எஞ்சிய 5 ஆயிரம் ரூபா வேதனம் ஜூன் மாதம் முதல் வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளர்.

இதனிடையே, தனியார் சேவையாளர்களுக்கான வேதனத்தை 2 ஆயிரத்து 500 ரூபாவால் அதிகரிக்குமாறு நிதியமைச்சர் கோரியுள்ளார்.

ஒய்வூதிய கொடுப்பனவாளர்களுக்கான கொடுப்பனவு ஆயிரம் ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மண்ணெண்னை 6 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.
400  கிராம் பால் மா பொதியின் விலை 61 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.

கோதுமை மா 12 ரூபா 50 சதத்தால் குறைக்கப்பட்டுள்ளது.
இன்றிலிருந்து அமுலாகும் வகையில், சீனியின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயுவின் விலை 300 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.
தகரத்தில் அடைக்கப்பட்ட மீன் 60 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது...
 
 
இன்று நள்ளிரவுடன் அமுலுக்கு வரும் 13 பொருட்களின் விலைகள் வகையில் குறைகின்றன.
சீனி- கிலோ 10 ரூபா குறைப்பு
பால் மா - குறைப்பு 61 ரூபா (400கிராம் பக்கெற் புதிய விலை - 325 ரூபா)
கோதுமை மா - கிலோ 12.50 ரூபா குறைப்பு
பாண் - 6 ரூபா குறைப்பு
பாசிப்பயறு - கிலோ 40 ரூபா குறைப்பு
நெத்தலி - கிலோ 15 ரூபா குறைப்பு
டின் மீன் - 60 ரூபா குறைப்பு
கொத்தமல்லி - கிலோ 60 ரூபாவால் குறைப்பு
மாசிக் கருவாடு - கிலோ 10 ரூபாவால் குறைப்பு
மிளகாய்த் தூள் - கிலோ 25 ரூபாவால் குறைப்பு

No comments:

Post a Comment